கேரள வெள்ள நிதிக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த மாணவி : நடிகர்களை விட அதிகம்!!

338

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பள்ளி மாணவி 2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கரன், இவரது மகள் ஸ்வகா (16), தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

கேரளாவில் பெய்த பலத்த மழை வெள்ளத்தால் பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது. கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகவல் ஸ்வகாவுக்கு தெரியவந்தது. தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்து முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.

கடிதத்தை விஜயன் நெகிழ்ச்சியடைந்து பாராட்டியதோடு நிவாரணத்தை கண்ணூர் கலெக்டரிடம் ஒப்படைக்கும்படி கூறினார். இதனையடுத்து மாணவி கண்ணூர் கலெக்டர் முகமது அலியிடம் தனது 1 ஏக்கர் நிலத்தை நிவாரணத்துக்கு வழங்கினார்.

ஸ்வகா வழங்கிய ஒரு ஏக்கர் நிலம் 2 கோடிக்கு மேல் இருக்கும் என ரியர் எஸ்டேட் அதிபர்கள் கூறியுள்ளனர்.

நடிகர்கள் பலர் சில லட்சங்களே நிவாரண நிதிக்கு கொடுத்துள்ள நிலையில் கோடிக்கணக்கான பணம் மதிப்புடைய நிலத்தை மாணவி கொடுத்தது பாராட்டுகளை பெற்றுள்ளது.