காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு தந்த மாணவன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

840

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மாற்றுத்திறனாளி மாணவர், காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர், சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தார்.

பின்னர் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அளித்தார். இந்த பணத்தை காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.