வெள்ளவத்தையில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை!!

276

கொழும்பில் பல பகுதிகளை இணைக்கும் வகையில் கால்வாய் போக்குவரத்தினை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள உள்ளக நீர் ஓடைகள் மற்றும் ஆற்றின் ஊடாக பயணிகளுக்கான போக்குவரத்து அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரையான நீர் கால்வாய் ஊடாகவும் , கொழும்பு கோடையிலுள்ள பேர வாவி ஊடாக யூனியன் பிளேஸ் வரையும், களனி கங்கை ஊடாக மட்டக்குளியிலிருந்து ஹங்வெல்ல வரையும் இந்த போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து திட்டத்தின் மூலம் அதிகளவான சுற்றுலா பயணிகளை கவர முடிவதுடன், வீதி போக்குவரத்தையும் குறைக்க முடியும்.

காலி வீதியில் வெள்ளவத்தை முதல் தெஹிவளையில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில் கால்வாய் போக்குவரத்து சேவை பெரும் வரப்பிரசாதமாக அமையும் என வெள்ளவத்தை, தெஹிவளை பகுதி மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.