யாழ் சாவகச்சேரியில் கோர ரயில் விபத்து : உடல் சிதறி இருவர் பலி!!

269

யாழ் சாவகச்சேரி சங்கத்தானையில் சற்று முன்னர் ஏற்பட்ட ரயில் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

சங்கத்தானை அரசடி ரயில் கடவையில் ஒளி சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே விபத்திற்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று (22.08) பிற்பகல் 7.15 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் மட்டுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் 23 வயதுடையவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயிரிழந்தவர்களது விபரம் குறித்து இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.