இலங்கையில் மோட்டார் வாகனங்கள் வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சித் தகவல்!!

647

இலங்கையில் மோட்டார் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமகால அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, முன்னர் மோட்டார் வாகனகளுக்கு 4 வருடங்களாக செலுத்தப்பட்ட வரிப்பணம் தற்போது ஒரே நேரத்தில் செலுத்த நேரிட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய 1800ccக்கு அதிகமான பெற்ரோல் வாகனம், 2300ccக்கு அதிகமான டீசல் வாகனங்கள் மற்றும் 200 கிலோ வோட் மின்சார வாகனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த மோட்டார் வாகனங்களுக்காக அறவிடப்படும் வரிப்பணம் முதல் வருடத்தில் 175,000 ரூபாயில் இருந்து ஆரம்பித்து வருடா வருடம் குறையும் வகையில் காணப்படும்.

புதிய சட்டத்திற்கமைய 7 வருடங்களுக்காக வரிப்பணம் ஒரே நேரத்தில் செலுத்த நேரிட்டமையினால் அந்த வரிப்பணத்தை வாகன விலையுடன் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இயந்திர திறன் குறைந்த வாகனங்களுக்கு அரசாங்கத்தினால் பெருமளவு வரிப்பணம் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.