வவுனியாவில் 22 வயது யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை!!

795

வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்றிரவு (23.08.2018) இரவு 7 மணியளவில் 22 வயதுடைய யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

சாம்பல் தோட்டம் ஐயப்பர் வீதியில் வசித்து வரும் 22 வயதுடைய வி.விந்தியா என்ற யுவதியே நேற்றிரவு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த யுவதி கொழும்பில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லுவதற்கு குடும்பதாரிடம் அனுமதி கோரியுள்ளார். கொழும்பு செல்வதற்கு குடும்பத்தினர் மறுத்த சமயத்தில் வீட்டின் அறை ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.