மகாராஷ்டிரா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் சச்சின் தொடர்பான பாடங்கள் இடம்பெறவுள்ளன. கிரிக்கெட் ஜம்பவனான சச்சின் தனது விளையாட்டு உலகிற்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஸ்டிராவில் சச்சின் தொடர்பான பாடங்கள் இடம்பெறவுள்ளன.
இதுகுறித்து நிரூபர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜேந்திர டார்டா, பள்ளிக்குழந்தைகள் சச்சினின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை அறிந்து கொள்ளும் வகையில் அவர் தொடர்பான பாடங்களை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.