ஆன்மீகத்தில் தீவிரம் காட்டும் நடிகை சுருதிஹாசன்!!

326

sruthiநடிகை சுருதிஹாசன் தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். இன்னொருபுறம் ஆன்மீகத்திலும் தீவிரம் காட்டுகிறார். படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களில் பிரபலமான கோவில்களை பார்த்தால் சாமி கும்பிட சென்று விடுகிறார். சிறப்பு அர்ச்சனைகளும் செய்கிறார்.

சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவிலுக்கும் சென்று வழிபட்டார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறும்போது ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு முதல் தடவையாக சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான தரிசனம் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

சுருதிஹாசன் நடித்து சமீபத்தில் ரிலீசான சில படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஏவடு, ரேஸ்குர்ரம் என்ற தெலுங்கு படங்களிலும் வெல்கம் பேக் என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார். இந்த படங்கள் வெற்றி பெற சாய்பாபாவிடம் வேண்டி வழிபாடு நடத்தி உள்ளார்.