வவுனியாவிற்கு அமைச்சர் மனோ கணேசன் வருகை : பாதுகாப்பு தீவிரம்!!

361

 

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள பண்டார வன்னியனின் 215வது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வருகை தரவுள்ளார்.

இதன் காரணமாக நகரசபை மண்டபத்தில் மோப்ப நாய்களுடன் பொலிசாரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச் செயற்பாடு நிகழ்விற்கு வருகை தந்துள்ள பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அரச கரும மொழிகள் அமைச்சர் வவுனியாவிற்கு வருவது புதியதல்ல. பல தடவைகள் வருகைதந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளதைக்காண முடிந்துள்ளது.