வவுனியாவில் மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு இளம் பெண்கள் : காரணம் என்ன?

904

வவுனியா சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை வீசமுற்பட்ட இளம் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை ஐந்து மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தேக்கவத்தை மற்றும் சாம்பல் தோட்டம் பகுதிகதிளை சேர்ந்த 27, 28 வயதுகளையுடைய இரு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 12 கிராம் கஞ்சாவும், 140 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பெண்களை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.