வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும்!!

471

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும் நேற்று (26.08) காலை 11 மணியளவில் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வடக்கு மீள் குடியேற்றம் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

தலைவராக கே.காதர் மஸ்தான், உபதலைவர்களாக நியூட்டன் சில்வா, டி.யே.பெனடிக், வெள்ளைசாமி மகேந்திரன், கனகராஜ், எஸ்.ஏ.தாஜீன் செயலாளராக குமாரசாமி மற்றும் உப செயலாளர்களாக லோகேஸ்வரன், ராகினி, விமலசிறி, சரத் வீரவர்த்தன, நிஸார்தீன், சுரேஸ், பொருளாளராக குமாரி தர்மதாஸ ஆகியோர் வவுனியா தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

இந் நிகழ்வில் நகரசபை உப தபிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.