வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

637

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது நெளுக்குளம், முள்ளிப்பிலவு சந்திப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரிடமிருந்து 100 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிசார் மீட்டுள்ளனர்.

உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜ.எம். நபீம் தலைமையில் சென்றவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் 100 கிராம் கேரள கஞ்சாவினை பொதி செய்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.