சீமெந்து தாங்கி வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பலி!!

690

திருகோணமலை தமிழ் வித்தியாலய வீதியில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை ஒன்றில் சீமெந்து தாங்கி உடைந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. என்டன் ஸ்டீபன் என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தின்போது, உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.