கணவனை அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமை செய்த மனைவி : என்ன காரணம் தெரியுமா?

444

தமிழகத்தில் கணவன் சொத்து எழுதி தராததால், மனைவி அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமைய செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவருக்கு 45 வயதில் லலிதா என்ற மனைவியும், ஸ்ரீநாத் என்ற மகனும் உள்ளனர்.

நாரயணசாமிக்கு 2 கோடி ரூபாய்க்கு பரம்பரை சொத்து உள்ளது. அதே போன்று வீட்டு வாடகையாக மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் வருகிறது.

இதையடுத்து அவரின் மனைவி மற்றும் மகனும் தினம் தினமும் சொத்தை எழுதி கேட்டுள்ளனர். மனைவி லலிதா உங்களிடம் உள்ள சொத்துகளை இப்போதே எனது பெயரில் மாற்றி எழுதி வைத்துவிடுங்கள் என்று தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

ஆனால் இதற்கு கணவர் நாராயணசாமி மறுத்து உள்ளார். உன் பெயருக்கு இப்போது சொத்தை மாற்ற மாட்டேன். பிறகு பார்க்கலாம் என்று கூறினாராம். இதன் காரணமாக இருவருக்கும் தினந்தோறும் பிரச்சனை வந்துள்ளது.

எப்படி கேட்டும் இவர் சொத்தை எழுதி வைக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த மனைவி மற்றும் மகன் இருவரும், ரமேஷை ஒரு தனி அறையில் அடைத்து வைத்து சொத்தை எழுதி தரும் படி கேட்டுள்ளனர்.

அவர் தொடர்ந்து மறுக்கவே, உடலில் பல இடங்களில் சூடு வைத்துள்ளனர். நேற்று இது போன்று சூடு வைத்த போது, ரமேஷ் வலி தாங்க முடியாமல் கத்தியதால், அருகிலிருப்பவர்கள் உடனடியாக அவரது உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பின் விரைந்து வந்த அந்த நபர் ரமேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு கொடுமை படுத்திய மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத்தையும் கைது செய்தனர். பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.