வவுனியாவில் முல்லைத்தீவு போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் இன்றி தவித்த மக்கள்!!

370

முல்லைத்தீவில் இன்று காலை மகாவலி குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வவுனியாவிலிருந்து செல்வதற்கு ஏற்பாடுகள் இன்றி பெருமளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை.

இன்று காலை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் அழைத்துச் செல்வதாக அறிவித்தல் வழங்கப்பட்டபோதிலும் பெருமளவானோர் சென்றுள்ளனர் எனினும் போக்குவரத்து ஏற்பாட்டு ஒழுங்கள் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை இதனையடுத்து மாற்றுவழிகளில் சிலர் சென்றபோதும் அதிகளவானோர் பேருந்து எற்பாடுகள் இன்றி திரும்பிச் சென்றுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

ஏனைய பல மாவட்டங்களிலிருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் வவுனியாவிலிருந்து காலை 9 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டு தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது அதனுடன் தொடர்புகொண்டபோது பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்று தகவல்,தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு சென்ற பலர் வேறுவாகனங்களில் ஏறிச் சென்றதைக்காணக்கூடியதாக இருந்ததுடன் இன்னும் சிலர் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றதைக்காணக்கூடியதாக உள்ளது இவ்வாறு போராட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காலை பேருந்து நிலையத்திற்குச் சென்ற மக்கள் தம்மைக்கைவிட்டுச் சென்றுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.