15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 40 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எல்ல, ஊவ- கரந்தெகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபரை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் விவகாரம் காணப்பட்டதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
அதன்படி, குறித்த நபர் சிறுமியை ஹாலி-எல , உடதொம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவரது உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.





