மகளின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தாய் : உடல் பாகங்கள் கொழும்புக்கு!!

639

குருணாகல் கொகரல்ல பிரதேசத்தில் 14 வயதான மகள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததையடுத்து அதிர்ச்சியில் உயிரிழந்த தாயின் உடல் பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் 14 வயதுடைய மகள் நேத்மி நிஷாதி பெரேரா நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 24ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

மெல்சிறிபுர மெதமுதல்ல மத்திய மஹா வித்தியாலயத்தின் தரம் எட்டில் கல்வி பயின்று வந்த நெத்மீ நிசாதி பெரேரா என்ற சிறுமியே மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், மகளின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது, குறித்த பெண் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார்.

சிறுமி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாகவும், தாயின் மரணம் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் உடல் பாகங்கள் கொழும்பு ரசாயன பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.