வவுனியாவில் வீதியில் நடந்து சென்றவர் மீது மரம் முறிந்து வீழ்ந்து படுகாயம்!!

657

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் தொல்பொருள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று (29.08.2018) மதியம் 12 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் அங்கு நின்ற பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த 56 வயதுடைய சிவா என்ற நபரே காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது முழுமையான சிகிச்சை வழங்கப்பட்டு உடல் நலம் தேறியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.