வவுனியாவில் கள்ள நோட்டுடன் இளைஞர் ஒருவர் கைது!!

914

வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டினை வியாபார நிலையத்திற்கு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வேப்பங்குளம் – பட்டாணிக்சூர் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிளுக்கான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்துவிட்டு 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டினை வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து குறித்த 5ஆயிரம் ரூபாய் நோட்டில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 5 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த 24வயதுடைய நபரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.