வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

584

வவுனியாவில் குருக்கள்புதுக்குளம் பூவரசங்குளம் பகுதியில் இன்றையதினம் (11.09) கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றிருப்பதாக விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவரசங்குளம் காட்டுப் பகுதியில் பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில் சாந்தகுமார் லூகஸ் (வயது 25) என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.