என் மனைவியிடம் அவர் அப்படி நடந்து கொண்டதால் கொன்றேன் : கணவர் வாக்குமூலம்!!

285

தமிழ்நாட்டின் கடலூரில் டிராக்டர் ஓட்டுனர் தனது முதலாளியை கொலை செய்தது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (31). என்பவர் டிராக்டர் வைத்துள்ளார். இந்த டிராக்டரில் சக்திவேல் (24) என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்தார்.

முருகனும் அடிக்கடி டிராக்டரை ஓட்டிய நிலையில் ஒருமுறை மணல் கடத்தியுள்ளார். அப்போது பொலிசார் முருகனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அவர் அங்குள்ள பாலத்தின் கீழ் சடலமாக கிடந்தார்.

இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் முருகனின் ஓட்டுனர் சக்திவேல் மீது சந்தேகம் உள்ளதாக முருகனின் மனைவி வளர்செல்வி கூறினார்.

இதையடுத்து பொலிசார் சக்திவேலிடம் விசாரித்த போது, முருகனை தான் கொலை செய்ததாக அவர் ஒப்பு கொண்டார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், முருகன் என்னிடம் நன்றாக பழகினார்.

திடீரென என் வீட்டுக்கு வந்து வேலை பற்றி சொல்லுவார். நான் இல்லாத நேரத்திலும் என் வீட்டுக்கு அவர் வருவதாக தெரியவந்த போதும் நான் அவரை சந்தேகப்படவில்லை.

ஆனால் அதை முருகன் தவறாக பயன்படுத்தி கொண்டார். எனது மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி அவர் கையில் போட்டு கொண்டதால் அவர்களுக்குள் தவறான நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரையும் நான் கண்டித்தும் அவர்கள் கூடாநட்பை விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் முருகனை கொல்ல முடிவெடுத்தேன்.

அதன்படி அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டேன் என கூறியுள்ளார். விசாரணை முடிந்ததும் சக்திவேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.