நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போதே உயிரிழந்த பிரபலம் : அதிர்ச்சி வீடியோ!!

414

பிரபல எழுத்தாளர் ரீட்டா ஜிதேந்திரா நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா ஜிதேந்திரா தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், நேரலையாக ஒளிபரப்பாகும் ‘குட் மார்னிங் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சியில் நன்றாக பேசிக்கொண்டிருந்த ரீட்டாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

மேலே பார்த்தபடியே மூச்சு விட திணறிய ரீட்டா அடுத்த சில வினாடிகளில் உயிரிழந்தார். தூர்தர்ஷன் தொலைக்காட்சி வரலாற்றில் நேரலையில் ஒருவர் இறப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த சம்பவமானது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எஸ்.எம்.ஹெச்.எஸ். மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சலீம் தக் கூறுகையில், இதயத்துடிப்பு திடீரென தாறுமாறாக துடித்திருக்கலாம். அதனால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.