மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொண்டு வந்த கணவன் : சொன்ன அதிரவைக்கும் காரணம்!!

576

இந்தியாவில் மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் Tarikere தாலுகாவின் Shivani பகுதியைச் சேர்ந்தவர் Satish (35). இவருக்கும் Roopa (28) என்ற பெண்ணிற்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் சதீஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூர்மையான ஆயுதம் கொண்டு, மனைவியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார்.

அதன் பின் அதை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளார்.

அப்போது அவர் இவள் என்னை ஏமாற்றிவிட்டாள். தோட்டத்தில் ஒரு பையனுடன் இருப்பதைக் கண்டேன். இவளை கொலை செய்துவிட்டேன். அவன் தப்பி ஓடிவிட்டான் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.