3 குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்ற தாய் : அடுத்து செய்த திடுக்கிடும் செயல்!!

334

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையால் தனது மூன்று குழந்தைகளையும் எரித்துக்கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கும் மனைவி தனலட்சுமிக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டது.

இளங்கோவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனலட்சுமி தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது மாமனார் வீட்டுக்குச் சொன்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை தனலட்சுமி தனது மூன்று குழந்தைகள் மீதும் மண்ணெண்ணய் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைச் செய்துகொண்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் தலைமறைவான இளங்கோவனை தேடி வருகிறார்கள்.