சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தமைக்கு எதிராக முறைப்பாடு!!

264

sachinதகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு ஆர்வலர் திபாஷிஷ் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது எதிர்த்து, தேர்தல் கமிஷனிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதில் சச்சின் டெண்டுல்கர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு ராஜ்ய சபா எம்பியாவார். மேலும் அவருக்கு கோடிக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது தில்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், சட்டீஸ்கர் மற்றும் மிசோரமில் தேர்தல் நடைபெறுகிறது

இந்த சூழலில் அவர் கடந்த சனிக்கிழமையன்று மும்பையில் நடைபெற்ற 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.
அன்று சச்சின் மற்றும் அறிவியல் அறிஞர் சிஎன்ஆர்.ராவ்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

சச்சினின் ரசிகர்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.