மகனின் திருமண விழா மேடையிலேயே உயிரிழந்த தந்தை : சோக சம்பவம்!!

347

உசிலம்பட்டியில் மகனின் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த மேடையிலேயே தந்தை திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மொண்டிக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கும், வகுரணியைச் சேர்ந்த கமலி என்பவருக்கும் இன்று காலை உதயப்ப நாயக்கனுரில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் ஆந்தகுமாரின் தந்தை தவசியிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.

அப்போது தவசி திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், தவசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மகனின் திருமணம் நடைபெற்ற மேடையிலேயே தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.