காவல்நிலையத்தில் பொலிசாரை கோடாரியால் கொடூரமாக தாக்கிய நபர் : வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

349

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நபர் காவல்நிலையத்தில் இரண்டு பொலிசாரை கோடாரியால் தாக்கிவிட்டு, அதன் பின் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் Umri காவல் நிலையத்திலே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Vishnu Rajawat என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பரை பொலிசார் அத்து மீறி நடந்த குற்றத்திற்காக கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் லாக் அப்பில் அடைக்கப்படவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட Vishnu Rajawat என்ற 25 வயது இளைஞன் அங்கிருந்த கோடாரியை எடுத்துக் கொண்டு, காவல்நிலையத்தில் இருந்த கான்ஸ்டெபிள் Umesh Babu மற்றும் Gajraj Singh-ஐ கொடூரமாக கோடாரியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது சிகிச்சை பெற்று வந்த Umesh Babu சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Gajraj Singh-க்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த Umesh Babu குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் Shivraj Singh 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் பொலிசாரை தாக்கியது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவி பதிவாகியதால், தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

பொலிசாரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது குறித்து தகவல்கள் இல்லை.