ஆறு வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த முதியவர்!!

327

6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவரைக் கைது செய்ய தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொட்டதெனியாவையிலிருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை செல்லும்போது தம்புத்தேகமவில் உள்ள தனது சகோதரனின் மகளின் வீட்டுக்கு குறித்த முதியவர் சென்றுள்ளார்.

அங்கு சகோதரரின் மகளின் 6 வயது சிறுமிக்கு சொக்லேட் வாங்கி கொடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முதியவர் புனித யாத்திரைக்கு சென்ற பின்னர் சிறுமியின் தாய் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அதன் பிறகு முதியவர் செய்த காரியத்தை தாயிடம் தெரிவித்துள்ளார் சிறுமி.

தாய் தனது மகளை தம்புதெகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்தநிலையில், வைத்தியசாலை ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.