இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆய்வுகளை மேற்கொண்டு புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி திருகோணமலையில் கற்பாறைகள் உள்ள மலைப் பாங்கான பகுதிகளிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த நில நடுக்கத்தின் பின் வேறு நில அதிர்வுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தரிவிமல் சிறிவர்தன ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.35 அளவில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





