தாயைக் காப்பாற்ற சென்ற மகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

482

திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் தாயும் மகளும் கரடி தாக்குதலுக்குள்ளான நிலையில் கோமரங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தும் குறித்த சம்பவம் இன்று பத்து முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

இவ்வாறு கரடித் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கோமரங்கடவல, மயிலவெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய தாயாரான எஸ்.ரம்யலதா மற்றும் அவரது மகளான 20 வயதுடைய லக்சானி ஆகிய இருவருமே கரடி தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

வீட்டுக்குப் பின்னால் மலசல கூடத்திற்கு சென்றபோது தாய் கரடி தாக்குவதாக கதறிய போது தாயைக் காப்பாற்றுவதற்காக மகள் ஓடிச் சென்றதையடுத்து மகளையும் கரடி தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.