இராகலை – சென் லேனார்ட் மேல் பிரிவில் இருவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சடலங்களை இன்று மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சென் லேனார்ட் மேல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் காணப்படும் குகை ஒன்றில் இருந்தே இந்த சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 29 மற்றும் 31 வயதுகளை உடையவர்கள் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





