வவுனியாவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு : 50 ஆயிரம் ரூபா அபராதம்!!

337

வவுனியா சேமமடுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசாரின் நடவடிக்கையின்போது மணல் உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது உழவு இயந்திரச்சாரதிக்கு 50ஆயிரம் ரூபா நீதிமன்றத்தினால் தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று முன்தினம் போகஸ்வெவ பகுதியிலிருந்து சேமமடு படிவம் 2இற்கு சட்டவிரோதமான முறையில் எவ்வித ஆவணங்களும் இன்றி உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மணல் ஓமந்தைப் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட மணலுக்கு நீதிமன்றத்தினால் 50 ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.