சிறுமியினால் காப்பாற்றப்பட்ட மிகப் பெரிய பாம்பு : பிரதேச மக்களின் அதிரடி செயற்பாடு!!

293

கிணற்றுக்குள் சிக்கிய மிகவும் நீளமான பாம்பு ஒன்று வனவிலங்கு அதிகாரிகளினால் காப்பாற்றப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் பாம்பு சிக்கியுள்ளமையை அவதானித்த சிறுமி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திம்புலாகல, மனம்பிட்டிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து பாம்பு மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட பாம்பு, மனம்பிட்டிய காட்டுக்குள் அதிகாரிகளால் விடப்பட்டுள்ளது.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு மணித்தியால மீட்பு நடவடிக்கையின் பின்னர் பாம்பு கிணற்றில் இருந்து உயிருடன் வெளியேற்றப்பட்டது.

திம்புலாகலை வனவிலங்கு அலுவலக அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து இந்த பாம்பினை காப்பற்றியுள்ளனர்.

8 அடி நீளமான இந்த பாம்பை சிறுமி ஒருவரே முதலில் அவதானித்ததாகவும், அதனாலேயே பாம்பு காப்பாற்றப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.