கொடிய விஷம் கொண்ட பாம்புக்கு மறுவாழ்க்கை கொடுத்த பாசக்கார நபர்!!

551

மும்பை தகிசரில் என்ற புறநகர் பகுதியில் கொடிய விஷம் கொண்ட விரியம்பாம்பு கம்பால் தாக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை, ஹவல்தார் என்ற நபர் பார்த்து அதை அனில் குபால் என்ற பாம்பு பிடிக்கும் நபரிடம் ஒப்படைத்தார்.

விரியன் பாம்பு கொடிய விஷமுடையது. அனில் அந்த பாம்பை உடனடியாக செம்பூரில் உள்ள கால்நடை மருத்துவர் தீபா கத்யாலிடம் கொண்டு சென்றார்.

டாக்டர் அந்த பாம்பை பரிசோதித்து பார்த்தபோது அதன் முதுகெலும்பு உடைந்திருந்தது தெரிந்தது. அந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. ரேடியோலாஜிஸ்ட் மருத்துவர் ரவி தபார் அதை செய்தார்.

தான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்ப்பதாக மருத்துவர் தபார் கூறியுள்ளார். பாம்புக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தாமல் வாய்வழியாக மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அது தற்போது உடல்நிலை நன்கு தேறி வருவதாக மருத்துவர் தபார் தெரிவித்தார். முழுமையாக குணம் அடைந்ததும் காட்டுப் பகுதியில் கொண்டுபோய் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.