வவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா!!

745

தமிழ் மணி அகளங்கன் எழுதிய ‘சங்கமும் தமிழரும்’ ஆய்வுக்கட்டுரை நூல் வெளியீட்டு நிகழ்வு கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தலைமையில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் இன்று (24.09) நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா கலந்துகொண்டிருந்தார். நூல் வெளியீட்டுரையை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன் நிகழ்த்தினார்.

நூலின் முதற் பிரதியை கலாபூசணம் சு.சண்முகவடிவேல் வெளியீடு செய்து வைத்தார். வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் ந.பார்த்தீபன் நூல் நயவுரை ஆற்றினார்.

நிகழ்வில் விருந்தினர்களாக தொடர்பியல் வித்தகர் அருணா செல்லத்துரை, கலாபூசணம் க.ஐயம்பிள்ளை, பண்டிதர் வீ.பிரதீபன், மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சிவகஜன், மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராசா, வர்த்தக சிரோன்மணி ரி.கே.ராஜலிங்கம், நயினை கி.கிருபானந்தா, ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.