யாழ்ப்பாணத்தை உலுக்கிய பெரும் சோகம் : இரட்டை குழந்தை பெற்ற தாய் மரணம்!!

281

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி யாழ் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த வேளையில் உயிரிழந்துள்ளார்.

வேலணையைச் சேர்ந்த 32 வயதான 4 பிள்ளைகளின் தாயாரான விஜயகுமார் நிரோஜனி என்பவரே நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

பன்னீர்க்குடம் குருதியில் கலந்ததால் அவர் உயரிழந்ததாக வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கர்ப்பிணித் தாய் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் பிற்பகல் 3 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகள் பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில் தாயார் மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். தாயாரின் அமினி ஓடிக் திரவம் குருதியில் கலந்துகொண்டதால் இறப்பு ஏற்பட்டது என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதளையின் பின்னர் சடலம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

உயிரிழந்த தாயாரின் இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.