தேசிய ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த மாணவி வெள்ளிப்பதக்கத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவி மோக்சிதா வயது (07) மதிதரன் தேசிய ரீதியில் பண்டாரகமவில் 15.09.2018 அன்று நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்குகொண்டு இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
பயிற்றுவிப்பாளர் ஜெஸ்லி மார்சலின் வழிநடத்;தலின் கீழ் வடமாகாண ரீதியில் சம்பியன் பட்டத்தை வென்று குறித்த மாணவி தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










