வவுனியாவில் துருப்பிடித்த கொள்கலனில் சமையல் எண்ணெய் விநியோகம்!!

558

வவுனியாவில் சமையல் எண்ணெய் விநியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 30ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன் வவுனியாவிலுள்ள வியாபார நிலையங்களுக்கு சமையல் எண்ணெய் விநியோகம் மேற்கொள்ளும் கொள்கலன் ஓமந்தை பொது சுகாதார பரிசோதகரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கொள்கலன் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சமையல் எண்ணெய் வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து குறித்த கொள்கலன் 300 லீற்றர் எண்ணெய்யுடன் கைப்பற்றப்பட்டு விநியோகஸ்தருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு அண்மையில் எடுத்து கொண்ட நிலையில், விசாரணை அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.