தாயின் சடலத்தின் மீது உட்கார்ந்த அகோரி : பூஜை செய்து உடலை அடக்கம் செய்த வீடியோ!!

574

தமிழகத்தில் தாயின் சடலத்தின் மீது உட்கார்ந்து பூஜை நடத்திய அகோரியைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துள்ளனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது.

காசியில் அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் நிர்வாகித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டனின் தாயார் மேரி காலமானார். இதையடுத்து அரியமங்கலம், மத நல்லிணக்க இடுகாட்டிற்கு சென்ற மணிகண்டன், தாயின் சடலம் மீது அமர்ந்து பூஜை செய்தார்.

அதன் பின் உடலை அடக்கம் செய்தார். அகோரிகளின் இந்த விசித்த பூஜையானது அப்பகுதினரிடையே வியப்பை ஏற்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.