வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் பேரூந்தினை கொண்டு சென்ற சாரதி, நடத்துனர் கைது!!

754

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் பேரூந்தினை கொண்டு சென்ற இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனரை வவுனியா பொலிஸார் இன்று (03.10.2018) கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்குரிய பேரூந்து நேற்று முன்தினம் (01.10.2018) வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

“புதிய பேரூந்து நிலையத்தினுள் பேரூந்தினை கொண்டு சென்றமை” என குற்றம் சாட்டப்பட்டு குறித்த இ.போ.ச பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு இன்றைய தினம் சமூகமளிக்குமாறு நேற்றையதினம் அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் நிலையத்திற்கு இன்று (03.10.2018) சமூகமளித்த இ.போ.ச பேரூந்தின் சாரதி , நடத்துனரை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.