வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி 197 புள்ளிகள் பெற்று தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று சாதனை!!

959

வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தையும் வவுனியா மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழில் இரு மாணவர்கள் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் மகேந்திரன் திகலோலிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் நவஸ்கன் நதி ஆகிய இருவரும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தை வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா பெற்றுள்ளார்.

முழுமையான தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

சாதனை படைத்த இம் மாணவிக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.