கணவன் இறந்த செய்தி கேட்டு அதே இடத்திற்கு சென்று தற்கொலை செய்துகொண்ட மனைவி : சோக சம்பவம்!!

577

ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் அவருடைய மனைவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதியான Pamuluru Sudhakar (62) கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக வலியால் துன்பப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த Pamuluru கடந்த வெள்ளிக்கிழமையன்று ரேணிகுண்டா பகுதியில் Chadalavada பொறியியல் கல்லூரிக்கு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

கணவன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி Varalakshmi (56), கணவன் இறந்து கிடந்த இடத்திற்கு சென்று, அவரது உடலுக்கு அருகே தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சடலங்களை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.