தில் இருந்தா என்கிட்ட மோதுங்க… அப்பா விஜயகுமார் செத்துபோகவேண்டும் : வனிதா அதிர்ச்சி பேட்டி!!

560

எங்க அப்பாவைப் பற்றிப் பல பேருக்குத் தெரியாது. அவர் நிறைய தப்பு பண்ணியிருக்கார் என அவரது மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சொத்துப் பிரச்னை காரணமாக வனிதா மற்றும் அவரது தந்தை விஜயகுமாருக்கு இடையில் சண்டை ஏற்பட்டது.

தனது அம்மாவுக்கு சொந்தமான ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து தன்னை அடித்து துரத்திவிட்டதாக வனிதா கூறியுள்ளார். தனது அம்மாவுக்கு சொந்தமான வீட்டில் வசிப்பதற்கு தனக்கு உரிமை இருக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே எனது குடும்பத்தினருடன் எனக்கு பிரச்சனை. ஆனால் அது வெளி உலகத்துக்கு தெரியவந்தது 2010 ஆம் ஆண்டுதான்.

எனது அப்பா நிறைய விடயங்களில் பழி சுமத்தியிருக்கிறார். தனது முதல் மனைவியின் பிள்ளைகளை நல்லபடியாக வைத்துக்கொண்டார். அவர்களை சினிமாவில் நடிக்கவைக்கவில்லை.

நல்லபடியாக சம்பாதித்து கொடுத்து தனது முதல் மனைவியின் பிள்ளைகளை நல்லபடியாக வைத்துள்ளார். அருண் விஜய்யை மட்டும் சினிமாவில் நடிக்க வைத்தார்.

ஆனால், இரண்டாவது மனைவியான எனது அம்மா மஞ்சுளாவுக்கு பிறந்த எங்களை சினிமாவில் நடிக்க வைத்து பணம் சம்பாதித்துள்ளார்.

நான் வீட்டினை அபரித்துவிட்டேன் என என்மீது புகார் கொடுத்தார் என்றால் இது ஒரு கேவலமான குடும்பம். இப்படி ஒரு குடும்பத்தில் நானும் செத்துபோகவேண்டும், எனது அப்பா விஜயகுமாரும் செத்துபோகவேண்டும்.

எங்க அம்மா உண்மையாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் அந்த அளவுக்கு உண்மையாக இல்லை. எனது அம்மாவிடம் பணத்தினை வாங்கி அவரது முதல் மனைவியிடம் கொடுத்து வந்தார்.

எனது அண்ணன் அருண் விஜய், என்னிடம் பணியாற்றியவர்களிடம் மோதுகிறார், தில் இருந்தால் அவர் என்கிட்ட மோதவேண்டும். அருண் ஒரு குற்றவாளி.

அவனுக்கு பணம் வேண்டும். எங்க அப்பாவிடம் இருந்து பணத்தினை சுரண்டி வருகிறான். பெரிய சுயநலவாதி அவன்.

மேலும், எனது குடும்பத்து பிரச்சனைகள் பற்றி இரண்டு தங்கைகளான ப்ரீதாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் தெரியும். ஆனால் அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள். எங்க அம்மாவை குடிக்க வைத்து மன அழுத்தத்திற்கு ஆளாக்கியவர் தந்தை விஜயகுமார், இதன் காரணத்தினாலேயே எனது அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என கூறியுள்ளார்.