வவுனியா நகரசபை சிறுவர் பூங்காவில் பாடசாலை மாணவர்கள் சிலர் விடுமுறை நாட்களில் தனியார் வகுப்பிற்கு செல்வதாகக் கூறிவிட்டு சிறுவர்பூங்காவில் மக்கள் முகம்சுழிக்கும் வகையில் காதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.
இது நகரபிதாவிற்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் அவ்விடம் வந்த நகரபிதா ஜோடிகளை எச்சரித்து இது சிறுவர் பூங்கா ஒழுங்கினமாகச் செயல்படுவோர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்பதை கூறிச்சென்றதுடன் இன்றிலிருந்து நகரசபை பூங்காவுக்குள் தமிழர் பாரம்பரியத்தையும் காலாச்சாரத்தையும் காப்பதற்காக காதல் ஜோடிகள் பூங்காவிற்குள் செல்வதற்கு தடை விதித்துள்ளார்.
இச்செயற்பாட்டால் பொதுமக்கள் நகரபிதாவிற்கு நன்றி தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





