ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை : உருக்கமான 7 கடிதங்கள் சிக்கியது!!

264

இந்தியாவின் கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாலப்புழா கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (48), இவர் மனைவி மினி (43). தம்பதிக்கு அனுஸ்ரீ (17) மற்றும் அபினவ் (12) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தங்கள் வீட்டருகில் உள்ள முந்திரி தோப்பில் நால்வரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து நால்வரின் சடலங்களையும் கைப்பற்றிய நிலையில், வினோத் எழுதி வைத்திருந்த 7 கடிதங்களை கைப்பற்றினார்கள்.

கடிதங்களானது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுயநிதி குழுக்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அதில், நாராயணன் என்கிற குட்டன் என்பவர் என்னையும் ஒரு பெண்ணையும் இணைத்து தவறாக பேசி வந்தார்.

அந்த பெண் எனது சகோதரி போன்றவர் ஆவார். குட்டனின் செயல் எங்கள் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனால் நாங்கள் தற்கொலை செய்கிறோம், எங்கள் சடலங்களை குட்டனின் இடத்தில் உள்ள முந்திரி மரத்தின் அடியில் புதையுங்கள் என எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் குட்டன் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.