மனைவி இறந்த அடுத்த நிமிடமே உயிரிழந்த கணவன் : சோக சம்பவம்!!

308

மனைவியை காப்பாற்ற முயன்றபோது கணவனும் தீயில் கருகி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் காட்டுமன்னார் கோவில் அருகே மேலகஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நளினி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த சுரேஷ் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் மது குடித்துவிட்டு நளினியிடம் சுரேஷ் சண்டையிட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த நளினி சுரேஷ் உறங்கியதும் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். நளினியின் அலறல் சத்தம் கேட்டு விழித்த சுரேஷ் வேகமாக ஓடி சென்று நளினியை காப்பாற்ற முயன்றார். அப்போது சுரேஷ் மீதும் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து பலத்த தீக்காயங்களுடன் அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து இருவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.