காணாமல் போன இளம்காதல் ஜோடி : 4 நாட்களுக்கு பின் காட்டில் சடலமாக கண்டெடுப்பு!!

314

ஒடிசா மாநிலத்தில் காணாமல் போன இளம்காதல் ஜோடி 4 நாட்களுக்கு பின் காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் டிகாம்பை கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து ஜெனா (17). அப்பகுதியில் உள்ள கல்லூரியில் BNMA கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரும் ஜிதனாக கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சித்தாரணி பிரதானவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் வீட்டில் தெரிந்து விடவே, இருவரின் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் இருவரும் கடந்த 3-ம் திகதியன்று இரவு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளனர். தினபந்து தன்னுடைய மகளை கடத்தி சென்றுவிட்டதாக சித்தாரணியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், டோலாசாஹி பஜார் பகுதியில் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு அருகே இரண்டு பேரின் சடலங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இறப்பிற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.