மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்தது ஏன் : கணவரின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

441

மனைவியை குடும்ப உறவிற்கு அழைத்த போது, சண்டை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று கொலையாளி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் திருவெறும்பூர் அருகே காட்டூர் பிலோமினாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். எல்.ஐ.சி. முகவராகப் பணியாற்றிய இவருக்கும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெசிந்தா ஜோஸ்பின் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

சங்கருக்கு கடன் பிரச்சனை இருந்ததால், அதை அடைப்பதற்காக திருமணத்தின் போது ஜெசிந்தாவுக்கு கொடுக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை அடகு வைத்துள்ளார்.

இந்த விவகாரம் ஜெசிந்தாவுக்கு தெரியவர அவர் உடனடியாக சண்டையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஜெசிந்தா தன்னுடைய பெற்றோரின் வீட்டில் சென்று தங்கியுள்ளார்.

இருப்பினும் காயராஜின் பெற்றோர், மருமகளை மீண்டும் தனது மகனுடன் சேர்த்து வைப்பதற்காக சமாதானம் பேசியுள்ளனர். புகுந்த வீட்டினரின் சொல்லை தட்ட முடியாமல் கணவருடன் சேர்ந்து வாழ ஜெசிந்தா சம்மதித்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலை தேவாலயத்திற்கு செல்வதற்காக கீழ்தளத்தில் வசிக்கும் மகன் மற்றும் மருமகளை எழுப்புவதற்காக சகாயராஜின் தாய் சகாயமேரி சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் கதவை திறந்த போது, சங்கர் ரத்தக் கறையுடன் வந்து கதவை திறந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாயமேரி உள்ளே சென்று பார்த்த போது, ஜெசிந்தா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அலறியுள்ளார்.

இந்த சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்த மக்கள் உடனடியாக அங்கு வரவே, சங்கர் அங்கிருந்து தப்பியுள்ளார். தப்பிய அவர் சகாயராஜ் வி.ஏ.ஓ. முன் சரண் அடைந்தார். பின்னர் திருவெறும்பூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெசிந்தா வீட்டிற்கு வந்த பின்னும், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சகாயராஜ் குடும்ப உறவிற்கு அழைத்தத போது சண்டை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சகாயராஜ் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெறித்து தலையணையால் அழுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால் ஜெசிந்தா விழித்துக் கொண்டு சத்தமிட்டதால், காய்கறி நறுக்கும் கத்தியால் அவரின் கழுத்தில் சங்கர் வெட்டியுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரின் உதடுகள் முணுமுணுத்ததால், ஆத்திரத்தில் அரிவாளால் தலையை துண்டித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலத்திற்கு அருகிலேயே தலையை வைத்து விட்டு சிறிது நேரம் படுக்கையிலேயே இருந்ததாகவும், பின்னர் தாய் எழுப்பவும் அங்கிருந்து தப்பி வந்து சரண் அடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.