இரண்டு மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

434

சென்னையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 மாத ஆண் குழந்தையை, அதன் தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியில் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி வெங்கண்ணா-உமா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கள் குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள் என பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

அதில், புழுக்கம் காரணமாக வீட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்தனர். அதில் இரவு 2 மணியளவில் நைட்டி அணிந்த பெண்ணொருவர் கையில் குழந்தையுடன் நடந்து சென்றது தெரிந்தது.

அதன் பின்னர், ஏரி ஒன்றில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குழந்தையின் தாய் உமாவின் மீது சந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, குழந்தைக்கு பாலூட்டும் போது மார்பில் அதிக வலி இருந்த பிரச்சனையால், குழந்தையை கொன்றதாக அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பின்னர் பொலிசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.