வவுனியா இளைஞன் வடமாகாண ஆணழகன் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை!!

747

வடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா இளைஞன் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

வடமாகாண ரீதியில் கடந்த 06.10.2018 அன்று வடமாகாண உடற்பயிற்சி சங்கத்தினரால் இலங்கை கலைக்கல்லூரியில் நடாத்தப்பட்ட வடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா ஆச்சபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய குமாரசுவாமி நிசாந்தன் 55 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

மேலும் முதலாம் இடத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற இளைஞன் பெற்றிருந்தார்.